Vaasthu

  •    >
  • Details

இருப்பியல்

 இருப்பியல் என்ற சொல்லின் பொருள் இருப்பின் தன்மை என்பதாகும். ஒரு பொருளின் தன்மைக்கேற்றவாறு அப்பொருளை ஒரு இடத்தில் வைப்பது என்பது அது வைக்கப்படும் இடத்தின் சூழலைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு மனிதன் தன் இருப்பின் சூழலைப் பொருத்தே அவனது தேவைகள் கிடைக்குமா கிடைக்காதா என்பதை கொள்கிறான்.

 ஒரு மனையின் (Site) இருப்பு அதனைச் சுற்றியிருக்கும் திசைகளின் மேடு பள்ளங்கள், வெளிகள் இவற்றைக் கொண்டே நன்மையா தீமையா என்பதைக் கொண்டுள்ளது. இது எவ்வாறெனில் ஒவ்வொரு திசையும் தனித்தனித் தன்மை கொண்டவைகளாக உள்ளன. உதாரணமாக கிழக்கு வெப்பத்தைக் கொண்டு வரும் திசையாக உள்ளது. மேற்கு வெப்பத்தை இழக்கும் திசையாக உள்ளது. அதுபோல வடக்கு காந்த ஆற்றலை கொடுக்கும் திசையாக உள்ளது. தெற்கு காந்த ஆற்றலை இழக்கும் திசையாக உள்ளது.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, அல்லாது வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மெற்கு என இருக்கும் எட்டு திசைகள் ஒவ்வொன்றும் தமக்குள் இரண்டு பிரிவுகளாகி பதினாறு பகுதிகளாக உள்ளன.

 இந்த பதினாறு பகுதிகளும் நம் வாழ்வில் உள்ள அனைத்து விடயங்களையும் கொண்டுள்ளன. செல்வம், புகழ், சொத்து, வம்சவரவு, பொருள்வரவு, அறிவு, செயல், உறவுகள், பரிவர்த்தனைகள், உதவி, கௌரவம், இழப்பு, ஆளுமை, நடத்தை, விபத்து, விவாகரத்து, காதல், நட்பு, வெளித்தொடர்பு, நோய், இன்னும் பலவாக ஒவ்வொரு திசைப் பலன்களும் உள்ளன. (விரிவான திசைப்பலன்கள் இணைக்கப்பட்டுள்ளது) சத்து வரும் திசைகளிலிருந்து சத்துக்கள் வருவதற்கும் வந்த சத்துக்கள் நிலைப்படுவதற்கும் அவை தமக்குள் சூழன்று சுவாசத்தைப் போன்று வெளிப்படுவதற்கும் புவியின் ஈர்க்கும் தன்மையே காரணமாகிறது.

                       மேடு, பள்ளம், வெளி இவற்றால் ஏற்படும் புவியின் ஈர்ப்புவிசை வேறுபாடுகளால் சத்துவரும் திசைகளிலிருந்து அதிக ஆற்றலை எடுப்பதும், இழக்கும் திசைகளில் இழப்பின்றியோ குறைவான இழப்பையோ நாம் அமைத்துக் கொள்ள இயலும், இயக்கும் திசைகளின் ஈர்ப்பை நாம் சரியாக அமைத்து இயக்கத்தை சமமாகவோ விரைவாகவோ இயங்கச் செய்ய முடியும்.

                       ஒருமனை சதுரமாகவோ, செவ்வகமாகவோ அல்லது நாற்கரமாகவோ இருக்கலாம். ஒவ்வொரு பரிமாணத்திலும் அதன்மையத்திலிருந்தே திசைகள் அமைகின்றன. ஒரு நேர்திசைக்கான சதுர மனையில் வடக்கு, கிழக்கு, தெற்கு மேற்கு, திசைகள் அந்ததந்த பக்கங்களின் மையத்திலும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு இவைகள் மூலைகளிலும் அமையும்.


நேர் திசைக்கான செவ்வகமனையில் திசைகள் எவ்வாறு அமைகின்றன என்பதை மேலே உள்ள விளக்கப்படத்தில் பார்க்கலாம்.திசைகள் அனைத்தும் 360°க்குள் அடங்கும் ஒவ்வொரு திசைப்பிரிவும் 22.5°களாக அமைகின்றன. மனையின் பரிமாணத்தைக் கொண்டும் திசை மாற்றங்களைக் கொண்டும் ஒவ்வொரு மனையும் வேறுபடுகின்றன. இவ்வாறாக உள்ள மனையில் கட்டிடம் கட்ட சரியான பக்க அளவுகளைக் (Set Back) கொண்டு அமைக்க வேண்டும்.